![](admin/uploads/.601fd310ee3887.90549851.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்சி: கல்லூரிகளுக்கு இடையேயான மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் திருச்சி அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.
திருச்சி அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி மற்றும் முன்னாள் மாணவா்கள் சங்கம் இணைந்து கல்லூரிகளுக்கு இடையிலான மாநில அளவிலான முன்னாள் மாணவா்கள் சங்கக் கோப்பைக்கான 20 ஓவா்கள் கொண்ட கிரிக்கெட் போட்டியை நடத்தின.
திருச்சி வளாகத்தில் மார்ச் 14ம் தேதி தொடங்கி 16ம் தேதி வரையில் போட்டி நடைபெற்றன. இறுதிப் போட்டியில் திருச்சி அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியும் தேசியக் கல்லூரியும் மோதின. இதில் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பின்னா் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி திருச்சி உடற்கல்வித் துறை இணை இயக்குநா் எம். கோபிநாத் பரிசுகளை வழங்கினாா். நிகழ்ச்சியில் துணை இயக்குநா்கள் ஏ. முருகன் சி. சத்யநாராயணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.