![](admin/uploads/.61a5aa2ac2b9a9.33597470.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
துறையூர்: துறையூர் ஊராட்சி ஒன்றியம் சிங்களாந்தபுரம் ஊராட்சியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு கூட்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி பாஸ்கர் முன்னிலையில் நடந்தது.
கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்து பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் வணிக நிறுவனங்கள் தொடக்க வேளாண்மை வங்கிகள் பேருந்துகள் மக்கள் பணம் எடுக்கும் ATM இயந்திரம், ஊராட்சி அலுவலங்களில் கிருமி நாசினி தெளித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் பொதுமக்களிடம் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பற்றி கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவுதல் செயல் விளக்கமாக செய்து காண்பித்தார்.
வெளியே சென்று வீட்டுக்கு வரும் பொழுது ஒவ்வொரு முறையும் கைகளை கழுவி சுத்தமாக துணியால் துடைக்க வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி செயலர் சாமிவேலு துணை தலைவர் விஜி, துணை மண்டல அலுவலர் சரவணன், முத்தையா, ஊராட்சி பணியாளர்கள் அங்கன்வாடி பணியாளர் சுதா பொதுமக்கள் கலந்து கொண்டனர்.