Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நடிகர் பிரகாஷ்ராஜ் பிறந்த நாளில் கொரோனா பாதித்தோருக்கு உதவி

மார்ச் 26, 2020 10:04

சென்னை: நடிகர் பிரகாஷ்ராஜின் 55வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. தனது பிறந்த நாளில் கொரோனா வைரஸ் காரணமாக பரிதவிக்கும் 11 பேருக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் உதவி செய்துள்ளார்.

தென்னிந்திய மொழிப் படங்கள் மட்டுமின்றி, இந்தி படங்களிலும் தனது முத்திரையை நடிகர் பிரகாஷ் ராஜ் பதித்துள்ளார். பெங்களூருவைச் சேர்ந்த பிரகாஷ் ராஜ், கன்னட டிவி சீரியல்கள் மற்றும் படங்களில் நடித்து வந்தார். 

பாலசந்தரின் டூயட் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான பிரகாஷ்ராஜ், தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்தும் டப்பிங் பேசியும் உள்ளார்.

இந்தியா முழுவதும் சிறந்த நடிகராக அறியப்படும் நடிகர் பிரகாஷ் ராஜ், சமூக நலனில் அதிக அக்கறை செலுத்தி வருகிறார். கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில், வருமானம் பாதித்து கஷ்டப்படும் பெப்சி தொழிலாளர்களுக்கு தலா 25 கிலோ என்ற வகையில் 150 அரிசி மூட்டைகளை வழங்கியிருந்தார்.

தலைப்புச்செய்திகள்