Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: நடிகர் அர்ஜுன் தன் மகளுக்காக மீண்டும் ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ள ஒரு நடிகர் அர்ஜுன். இவரது பிட்னெஸ் மற்றும் ஆக்சன் காரணமாக இவருக்கு பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். நடிகராக மட்டுமில்லாமல் சில படங்களை இயக்கவும் செய்துள்ளார் அர்ஜுன். இந்நிலையில் தன் மகள் ஐஸ்வர்யாவுக்காக மீண்டும் ஒரு படத்தை இயக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் விஷால் நடித்த பட்டத்து யானை படத்தில் அறிமுகமானார் ஐஸ்வர்யா அர்ஜுன். இந்த படத்தை இயக்கியவர் பூபதி பாண்டியன். விஷாலுக்கு இருந்த மார்க்கெட்டிலும் பெரிய அளவில் இந்த படம் சோபிக்கவில்லை.
இதனால் அப்பா - மகள் இருவருமே கொஞ்சம் வருத்தத்தில் இருந்தனர். எனினும், மீண்டும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க முன்வந்தார் ஐஸ்வர்யா. சொல்லி விடவா எனும் பெயரில் படத்திலும் நடித்தார் ஐஸ்வர்யா. இந்த படத்தை அவரது தந்தை அர்ஜுனே இயக்கியிருந்தார். தமிழ் மற்றும் கன்னடத்தில் வெளியான இந்த படமும் சரியாக போகவில்லை.
இந்நிலையில், தன் மகள் ஐஸ்வர்யாவுக்காக அர்ஜுன் மீண்டும் இயக்குநராகிறார். இந்த முறை தெலுங்கில் அறிமுகமாகிறாராம். இந்த படத்தின் ஹீரோ, படத்தின் தலைப்பு உள்ளிட்டவை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிகிறது.