Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா வைரஸ் நோய் பரவுதலை தடுக்க நடவடிக்கை

ஏப்ரல் 01, 2020 11:14

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் அறிவுறுத்தலின்படியும், தஞ்சாவூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநரின்  வழிகாட்டுதலின்படியும், கொரோனா வைரஸ் நோய் பரவுதலை தடுக்கும் நடவடிக்கை நடைபெற்றது. 

அதாவது தஞ்சாவூர் மாவட்டம், சுவ £மிமலை பேரூராட்சியில் 30.03.2020 மற்றும் 31.03.2020 ஆகிய நாட்களில் காய்கறி கடை, இறைச்சி கடைகள், மீன் கடைகள் உரிமைய £ளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் பேரூராட்சியின் செயல் அலுவலர் ம.ராஜதுரையால் நடத்தப்பட்டது.

சுவாமிமலை பேரூராட்சி  பகுதி முழுவதும் காய்கறி கடைகள், இறைச்சி கடைகள், மீன் கடைகள் ஆகியவை முழுவதுமாக மூடப்பட்டு, பெ £துமக்களுக்கு காய்கறிகள், இறைச்சிகள், மீன் ஆகியவைகள் நேரடியாக வீட்டிற்கு சென்று டோர் டெலிவரி செய்யப்பட்டு வருகிறது. மறு  உத்தரவு வரும் வரை இந்நடைமுறை அமலில் இருக்கும்.

தலைப்புச்செய்திகள்