![](admin/uploads/.5e26b5d4bdde71.17015248.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 34 ஆயிரத்து 178 பேர் மீது வழக்கு போடப்பட்ட நிலையில் 28 ஆயிரத்து 40 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி வாகனங்களில் செல்வோர் மீது தமிழகம் முழுவதும் போலீசார் கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். நேற்று பகல் 12 மணி வரை 38 ஆயிரத்து 387 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 34 ஆயிரத்து 178 பேர் மீது வழக்கு போடப்பட்டது. 28 ஆயிரத்து 40 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. ரூ.14.47 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
மேலும், தமிழக காவல்துறை சார்பில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசிய காட்சியும், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசும் காட்சியும் இடம்பெற்றுள்ளன. போலீசார் வாகனங்களில் செல்வோருக்கு அறிவுரைகள் வழங்கும் காட்சி மற்றும் சாலை ஓரமாக வாழ்பவர்களுக்கு சாப்பாடு பொட்டலங்கள் வழங்கும் காட்சிகளும் அந்த வீடியோவில் உள்ளன.