Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ரு.150க்கு 11 வகையான காய்கறிகள்: திருச்சியில் அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்

ஏப்ரல் 03, 2020 03:17

திருச்சி: திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்டத்தில் ரூ.150க்கு 11 வகையான காய்கறிகள் மக்களுக்கு வழங்கும் பணியை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 65 வார்டுகளில் 11  வகையான காய்கறிகள் பொதுமக்களுக்கு வழங்கும் வாகனம் அரியமங்கலம் கோட்டத்தில் துவங்கப்பட்டது. ரூ.150க்கு வழங்கப்படும் 11 வகையான காய்கறியில் கத்தரிக்காய் 1 கிலோ, தக்காளி 1 கிலோ, முருங்கை கால் கிலோ, பச்சை மிளகாய் கால் கிலோ, பீட்ருட் அரை கிலோ, கேரட் கால் கிலோ, உருளைகிழங்கு 1 கிலோ, பெரிய வெங்காயம் 1 கிலோ, சவ்சவ் 1 கிலோ, வாழைக்காய் 2, தேங்காய் 1 அடங்கும்.

இந்நிகழ்ச்சியில்  மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் நகராட்சி கமிஷனர் சிவசுப்ரமணியன் தலைமை வகித்தனர். இதன் முலம் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவர் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தலைப்புச்செய்திகள்