![](admin/uploads/.6071843579f726.36415238.jpg)
Friday, 5th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
விருதுநகரில் பாஜக சார்பில் மோடி கிச்சன் உருவாக்கப்பட்டு தினமும் காலையும்,மதியமும் தலா 200 ஆதரவற்றோருக்கு உணவு வழங்கி வருகின்றனர்.
கொரோனா தாக்கத்தின் காரணமாக ஆதரவற்றவர்கள், முதியவர்கள் யாரும் வெளியே செல்ல முடியாத இந்த நேரத்தில் உணவுக்காக அவர்கள் துன்பப்படக்கூடாது என மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அம்மா உணவகம் மற்றும் நகராட்சி,உள்ளாட்சி அமைப்புகள் மூலம்,சுகாதாரப் பணிகளையும்,பசியாற்றும் நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
மேலும் தொண்டு நிறுவனங்கள் தனியார் அமைப்புகள் உள்ளாட்சியுடன் இணைந்து பணியாற்றவும் அழைப்பு விடுத்தது.
இந்நிலையில், விருதுநகர் பாஜக சார்பில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த நாளிலிருந்து மோடி கிச்சனை உருவாக்கி நகரில் உள்ள 36 வார்டுகளிலும் உள்ள ஆதரவற்றோரை தங்கள் காரியதர்சி மூலம் கண்டறிந்து அவர்களது இருப்பிடத்திற்கே சென்று காலையும் மதியமும் என இருவேளை உணவு அளித்து வருகின்றனர்.
இதற்காக அவர்களே கலவை உணவு தயாரித்து தொண்டர்கள் மூலம் பார்சல் செய்து வழங்கி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக இன்று வறுமையில் உள்ள 180 குடும்பத்தினரையும் கண்டறிந்து அவர்களுக்கு அரிசி,பருப்பு,சர்க்கரை மற்றும் பலசரக்கு காய்கறிகள் அடங்கிய பையை வழங்கினர்.
இயலாதவர்களின் இருப்பிடங்களுக்கேச் சென்று பாஜகவினர் உணவு மற்றும் உணவு தயாரிக்கும் பொருட்கள் வழங்கி வருவது ஆதரவற்றோரிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.