![](admin/uploads/.632d85bbd2bff3.90056683.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரசால் பலியானோரின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக 2.500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானோர் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 485 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 25-ம் தேதி மதுரையில் கொரோனா தொற்றுகாரணமாக ஒருவர் பலியானார். தமிழகத்தில் கொரோனாகாரணமாக ஏற்பட்ட முதல் பலியாக அமைந்தது. அதை தொடர்ந்து விழுப்புரம் மற்றும் தேனி மாவட்டத்தில் தலா ஒருவர் பலியாயினர்
இந்நிலையில் சென்னையில் ஸ்டான்லி மருத்துவமனையில் ஏப்.,3 ல் அனுமதிக்கப்பட்ட 75 வயது முதியவர் ஒரு மணி நேரத்தில் உயிரிழந்தார். பரிசோதனையில், அவருக்கு கொரோனா உள்ளது தற்போது கொரோனா இருந்தது உறுதியாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த அவர், துபாயில் இருந்து திரும்பியவர். அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், அவரது உறவினர்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.