Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஸ்பெயின், பிரசேல் நாட்டு தலைவர்களுடன் மோடி தொலைபேசியில் உரை

ஏப்ரல் 05, 2020 05:57

புதுடில்லி: கொரோனா வைரசை தடுப்பது குறித்து நேற்று அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன், பிரதமர் மோடி தொலை பேசியில் உரையாடியதையடுத்து, பிரேசில் அதிபர் ஜாயிர் போல்சொனாரோவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார். அப்போது கொரோனாவுக்கு எதிராக இரு நாடுகளும் கூட்டாக இணைந்து எப்படி செயல்படுவது குறித்து ஆலோசனை நடத்தினர்.

தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செசிடமும் பிரதமர் மோடி தொலை பேசி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அப்போது தொற்றுநோயால் தங்கள் வீடுகளில் முடங்கியுள்ள மக்களின் உளவியல் மற்றும் உடல் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த யோகா மற்றும் பாரம்பரிய மூலிகை மருந்துகளின் பயன்பாடு குறித்தும் வலியுறுத்தினார்.

தலைப்புச்செய்திகள்