Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பல நடிகர்கள் இணைந்து கொரோனா விழிப்புணர்வுக்காக ‘பேமிலி’என்ற குறும்படத்தில் நடித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல நாடுகளை புரட்டி போட்டுள்ளது. உலகம் முழுவதும் 12 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் அதன் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது நான்காயிரத்திற்கும் அதிகமான நபர்களுக்கு கொரோனா தொற்று இந்தியாவில் உறுதி படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கை மக்கள் சரிவர கடைபிடிக்கவில்லை என்றால் கொரோனா எண்ணிக்கை மிகவும் அதிகமாகும் என கூறப்படுகிறது.
அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்து ஊரடங்கை அமல் படுத்தினாலும் வெளியில் சுற்றுபவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு குறும்படம் தயாராகி உள்ளது. அதில் நடிகர் ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், சிரஞ்சீவி, பிரியங்கா சோப்ரா, ரன்பிர், ஆலியா பட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
‘பேமிலி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த குறும்படத்தை பிரசூன் பாண்டே என்பவர் இயக்கியுள்ளார். நடிகர்களை நேரில் வரவைக்காமல் ஸ்வீக்ஷீtuணீறீ (மெய்நிகர்) முறையில் இந்த குறும்படத்தை அவர் இயக்கியுள்ளார். அந்த வீடியோ விரைவில் வெளியாகவுள்ளது. ஊரடங்கை கடைபிடிப்பது, சமூக விலகல், வீட்டில் இருந்து பணியாற்றுவது, சுத்தமாக இருப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த குறும்படம் மூலமாக மக்களுக்கு வலியுறுத்தப்படும்.
இவ்வாறு குறும்படத்தை இயக்கிய பிரசூன் பாண்டே தெரிவித்தார்.