Saturday, 28th September 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் போகலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட குமுக்கோட்டை ஊராட்சியில் அடங்கிய பூவிளத்தூர், குமுக்கோட்டை கிராமங்களில் ஊராட்சி மன்ற தலைவர் பூவிளத்தூர் S.இராமமூர்த்தி முன்னிலையில், துணை தலைவர், வார்டு உறுப்பினர்கள், பஞ்சாயத்து கிளர்க் மற்றும் துப்புரவு தூய்மை பணியாளர்கள், பெரியோர்கள், இளைஞர்கள் சேர்ந்து கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு சம்மந்தமாக மக்களுக்கு எடுத்து சொல்லப்பட்டது.
இதனை அடுத்து பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு விபர துண்டு பிரசுரம் மற்றும் முக கவசங்கள் வழங்கப்பட்டது .
கிராமங்களின் வீதிகள் தோறும் கொரோனா வைரஸ் தடுப்பு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. குமுக்கோட்டை, பூவிளத்தூர் கிராம பொதுமக்கள் மற்றும் படித்த இளைஞர்கள் தாய்க்குலங்கள் கொரோனா வைரஸ் தடுப்பு விஷயத்தில் தினந்தோறும் தனி அக்கறையுடன் கவனமுடன் இருந்து செயல்பட்டு வருவதாக குமுக்கோட்டை, பூவிளத்தூர் ஊராட்சி மன்ற தலைவர்.S.இராமமூர்த்தி கூறினார்.