Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சுவாமிமலையில் தூய்மை பணியாளர்களுக்கு தேநீர், சிற்றுண்டி வழங்கல்

ஏப்ரல் 07, 2020 12:19

சுவாமிமலை: சுவாமிமலை பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் பணியாளர்களின் நலன் கருதியும்,  அவர்கள் காலை 6 மணி முதல் 11 மணி வரையும்,  சில வேளைகளில் அதற்கு மேலும், நேரம் காலம் பாராமல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதை கருத்திற்கொண்டும்,  அவர்களது பசி போக்கும் விதமாகவும் அவர்களுக்கு, காலை பணிக்கு செல்லும் முன் தேநீர் மற்றும் சிற்றுண்டி கொடுக்க உத்தேசிக்கப்பட்டது. அதன்படி, நேற்று முதல்  தேநீர் மற்றும் பிரெட் ஆம்லெட் வழங்கப்பட்டு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இத்தேனீர் மற்றும் சிற்றுண்டி உணவு பேரூராட்சி அலுவலகத்திலேயே பேரூராட்சி பணியாளர்களை கொண்டு தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. மேலும், தேநீர் மற்றும் சிற்றுண்டி தொடர்ந்து வழங்கப்படும் என சுவாமிமலை பேரூராட்சி செயல் அலுவலர் ராஜதுரை தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்