![](admin/uploads/.629117802163a7.14098112.jpg)
Wednesday, 3rd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
லக்னோ: ஏழைகளுக்கு உணவு வழங்குவதற்காக உ.பி., காங்., சார்பில் சமூக சமையல் கூடம் துவக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக மத்திய அரசு நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன் காரணமாக தொழில் அனைத்தும் முடங்கின. இதனால் ஏழைகள் உணவின்றி வாடும் நிலை உருவானது. இதனையடுத்து உ.பி., காங்கிரஸ் சார்பில் சமூக சமையல் கூடம் துவக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கூறப்படுவதாவது: உ.பி., மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும் தம்குஹிராஜ் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான அஜய்குமார் லல்லு குழுவினர் ஏழை மக்களுக்கு உணவு வழங்க முடிவு செய்தனர். லக்னோ நொய்டா, கிரேட்டர் நொய்டா,புலந்தேஷர், ஹப்ப;ர், வாரணாசி,மற்றும் பதேபூர் ஆகிய இடங்களில் சமூக சமையல் கூடம் துவக்கப்பட்டது.
இது குறித்து அவர் கூறுகையில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா வழிகாட்டுதலின் படி இந்த சேவை துவக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் ஏழைகளுக்கு உதவ முடியும். யாரும் பசியுடன் தூங்க விடக் கூடாது என்பதே எங்களின் ஒரே நோக்கம். எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல் மக்களுக்கு உதவுவதற்காக நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்றார்