Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கவரைப்பேட்டையில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கிய பாஜக.,வினர்

ஏப்ரல் 09, 2020 08:47

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் பாஜக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கினர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் பல்வேறு உதவிகள் செய்யப்படுகின்றன. குறிப்பாக பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் கபசுரக் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

 அவ்வகையில், திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் கவரைப்பேட்டை கிராமத்தில் பாஜக நிர்வாகிகள், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கினர். பாஜக நிர்வாகிகளான முத்து பாண்டியன், பாலாஜி, ஜெகதீஷ், உதயகுமார மற்றும் பாலாஜி ஆகியோர் கபசுரக் குடிநீர் வழங்கும் பணியில் ஈடுபட்டனர். அத்துடன் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், வெளியில் செல்லும்போது முக கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்