![](admin/uploads/.5ccabd1aba2f51.48418411.gif)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்சி: தமிழக முதல்வரின் கொரோனா நோய் தடுப்பு பொது நிவாரண நிதிக்கு அறம் மக் கள் நலச்சங்கம் சார்பில், சங்கத்தின் தலைவர் டாக்டர் சு.ராஜா ரூ.50 லட்சத்திற்கான காசோலையை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசுவிடம் வழங்கினார்.
இந்தியாவில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது வரை 5,734 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதில் 473 பேர் குணமாகியுள்ளனர். 166 பேர் உயிரிழந்துள்ளனர். 5,095 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா வைரசுக்கு 17 பேர் உயிரிழந்துள்ளனர். புதிதாக 540 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா நோய்த்தடுப்பு நட வடிக்கையில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தினமும் நோய்த் தொற்று உள்ளவர்களுக்கு பரிசோதனைகள், வீட்டுக்கண் காணிப்பு, வீடுகளில் ஆய்வு என பல்வேறு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மேலும் 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தொற்று எண்ணிக்கை 834 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 8 ஆனது.
கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்ததால் பல்வேறு தொழில் முடங்கியுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தமிழக மக்கள் தங்களால் முடிந்த நிதியுதவி அளிக்க வேண்டும் என, தமிழக முதல்வர் எடப்பாடி பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
அதையடுத்து தொழில் அதிபர் கள், முன்னணி தனியார் நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், நன்கொடையாளர்கள் என பலரும் தங்களால் முடிந்த நன்கொடைகளை அளித்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து பலரும் நிதி உதவி அளித்து வருகின்றனர்.
திருச்சியை மையமாக கொண்டு தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் அறம் மக்கள் நலச்சங்கம் ஊரடங்கு உத்தவரவு பிறப்பித்த நாள் முதல் கொண்டு தொடர்ந்து, பல இடங்களில் பொதுமக்களுக்கு தங்களால் முடிந்த மளிகை பொருட்கள், முககவசங்கள், உணவுகள் என பலதரப்பட்ட உதவிகளையும் செய்து வருகிறது.
இந்நிலையில் அறம் மக்கள் நலச்சங்கம் சார்பில் தமிழக முதல்வரின் கொரோனா நோய் தடுப்பு பொது நிவாரண நிதிக்கு, சங்கத்தின் தலைவர் டாக்டர் சு.ராஜா, பொதுச்செயலாளரும் மக்கள் ராஜ்யம் இதழின் ஆசிரியரு மான எஸ்.ரமேஷ்குமார் ஆகியோர் ரூ.50 லட்சத்திற்கான காசோலையை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசுவிடம் வழங்கினர்.