Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவை கூட்டுறவுச் சங்கத்தில் 81 பணியிடம் காலி: தகுதியானோர் விண்ணப்பிக்க அழைப்பு

ஏப்ரல் 09, 2020 03:55

கோவை: கோயம்புத்தூர் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர், மேற்பார்வையாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
மொத்தம் 81 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் ஏப்ரல் 15ம் தேதிக்குள் ஆன்லைன் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : கூட்டுறவுச் சங்கம், கோயம்புத்தூர்.
மேலாண்மை : தமிழக அரசு.
மொத்த காலிப் பணியிடங்கள் : 81.

பணி வகைகள்: உதவியாளர், இளநிலை உதவியாளர், மேற்பார்வையாளர் என மொத்தம் 81 பணியிடங்களை நிரப்பிடும் வகையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கல்வித் தகுதி: ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்கள், கூட்டுறவுப் பயிற்சி முடித்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 01.01.2020 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும். எஸ்.சி. எஸ்.டி. ஆதரவற்ற விதவைகள் உள்ளிட்டோருக்கு வயது வரம்பு இல்லை. பொது மற்றும் ஓ.சி. விண்ணப்பதாரர்கள் 30 முதல் 48 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம்: மேற்கண்ட பணியிடங்களுக்கு ரூ.10,000 முதல் ரூ.54,000 வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.cbedrb.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 15.04.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
முக்கிய நாட்கள் : ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 15.04.2020, எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் 21.06.2020.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெற http://www.cbedrb.in/how_apply_online.php இந்த இணையதளத்தை காணலாம்.

தலைப்புச்செய்திகள்