Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மண்ணச்சநல்லூர்: ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய பொதுமக்களுக்கு மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி சார்பில் உணவு பொட்டலங்கள், மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன.
திருச்சி புறநகர் மாவட்ட பா.ஜ.க. அமைப்பாளர் அஞ்சாநெஞ்சன், மேற்கு ஒன்றிய செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் ஆதரவற்றோர், வறுமையின் பிடியில் சிக்கி இருப்பவர்கள், திருநங்கைகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் பா.ஜ.க. பிரமுகர்கள் ராஜகோபால், பாஸ்கரன், மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.