Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தஞ்சை மருத்துவமனையில் கொரோனா வார்டில் இருந்த வாலிபர் தப்பி ஓட்டம்

ஏப்ரல் 09, 2020 04:11

தஞ்சை: சவுதி அரேபியாவில் இருந்து கொரோனா அறிகுறியுடன் வந்து தஞ்சை அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சையில் இருந்த வாலிபர் ராஜ்குமார் என்பவர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ளது பம்பப்படையூர் தென்னூர். இங்குள்ள கீழத்தெருவை சேர்ந்தவர் 36 வயது வாலிபர் ராஜ்குமார். சவுதி அரேபியாவில் வேலைபார்த்து வந்தார். இவர், சில நாட்களுக்கு முன் சொந்த ஊர் திரும்பினார். சளி, காய்ச்சல் இருந்ததால், கொரோனா பாதிப்பாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார்கள். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை அவர், தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு கொரோனா சிறப்பு வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், கொரோனா அறிகுறியுடன் இருந்த வாலிபர் ராஜ்குமார் யாரிடமும் சொல்லாமல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். ரத்த மாதிரி எடுப்பதற்கு முன் அவர் ஓடி விட்டதாக கூறப்படுகிறது.

எனவே, ராஜ்குமாருக்கு கொரோனா பாதிப்பு இருக்குமா?, இல்லையா? என்று தெரியவில்லை. அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்