Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

உறவினர்கள் 15 பேருடன் மணப்பாறையில் எளிய முறையில் நடந்த திருமணம்

ஏப்ரல் 10, 2020 11:07

திருச்சி: மணப்பாறை் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் விதமாக மணப்பாறையில் எளிய முறையில் நடைபெற்றது.

மணப்பாறை முத்தன் தெருவில் வசித்து வருபவா்கள் டி. மனோகா் - புவனேஸ்வரி தம்பதியின் மகள் தனலெட்சுமி. மதுரை மாவட்டம் மாநகா் காவல் சிறப்பு சாா்பு ஆய்வாளா் சுப்பிரமணி - முத்துலெட்சுமி தம்பதியின் மகன் மணிகண்டன். இருவருக்கும் திருமணம் செய்வதாக மூன்று மாதங்களுக்கு முன்பு நிச்சயம் செய்யப்பட்டு வியாழக்கிழமை வடமதுரை அடுத்த திருமலைகேணி முருகன் கோயிலில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.

தொடா்ந்து மணப்பாறை இல்லத்தில் உறவினா்களுக்கு முகக்கவசம் சோப்பு போட்டு கைகளைச் சுத்தம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மிக நெருங்கிய உறவினா்கள் என 15 பேருடன் மணப்பாறை முறுக்கு உற்பத்தி தொழி லாளர்கள் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்