![](admin/uploads/.6475a0f46877b8.57020628.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருப்பூர் : கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், திருப்பூர் மாநகர காவல் ஆணையர் விஜயகுமார் அறிவுறுத்தலுக்கிணங்க தமிழ்நாடு ஊர்க்காவல் படையினர் சார்பாக கடந்த 25ம் தேதி முதல் உணவில்லாமல் தவித்து வரும் ஆதரவற்ற முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், ஏழை, எளிய மக்கள் 1,000 பேருக்கு தினசரி மதியம் மற்றும் இரவு உணவு மற்றும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, தினந்தோறும் தமிழ்நாடு ஊர்க்காவல் படையினர் தங்களது சொந்த செலவில் சாலைகளில் இடமில்லாமல் வசிக்கக்கூடிய மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர், ஏழை, எளிய மக்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று தினமும் உணவு மற்றும் தண்ணீர் வழங்கி வருகின்றனர். இதை திருப்பூர் மாநகர துனை ஆனையர்கள் பத்திரிநாரயாணன், பிரபாகரன் ஆகியோரின் கண்காணிப்பில் தமிழ்நாடு ஊர்க்காவல் படையினர் வழங்கி வருகின்றனர்.