![](admin/uploads/.60ea95fac23645.44837585.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: தமிழ் திரைப்பட இயக்குனர் அட்லீ தற்போது கொரோனா நிவாரண தொகையாக 10 லட்சம் ரூபாயை தருவதாக அறிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக போடப்பட்டுள்ள ஊரடங்கு மக்களின் வாழ்க்கை முற்றிலும் முடக்கியுள்ளது. அதனால் சினிமா தொழிலாளர்கள் உட்பட தினமும் வரும் வருமானத்தை நம்பி இருந்தவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவும் விதமாக இந்தியாவில் பல்வேறு பிரபலங்களும் உதவி தொகை அளித்து வருகின்றனர். சினிமா தொழிலாளர்கள் அமைப்பான பெப்சிக்கு தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பலர் உதவி தொகை அளித்துள்ளனர்.
வேலையிழந்தசினிமா தொழிலாளர்களுக்கு ரஜினிகாந்த் 50 லட்சம், அஜித் 25 லட்சம் , ராகவா லாரன்ஸ் 50 லட்சம் ருபாய் உட்பட பல நடிகர்கள் உதவி தொகையாக அளித்தனர்.
அந்த பட்டியலில் தற்போது இயக்குனர் அட்லீயும் இணைந்துள்ளார். அவர் மொத்தமாக 10 லட்சம் ரூபாய் கொரோனா நிவாரண நிதியாக அளித்துளளார். அதில் 5 லட்சம் ரூபாய் பெப்சி அமைப்புக்கும், மீதி 5 லட்சம் ரூபாய் இயக்குனர்கள் சங்கத்திற்கும் அளித்துள்ளார்.