Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மருத்துவமனைகளுக்கு நோய் தடுப்பு உபகரணங்கள்: அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்

ஏப்ரல் 11, 2020 06:07


திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுத் தடுப்பு உபகரணங்களை சட்டப்பேரவை உறுப்பினரும் தெற்கு மாவட்ட திமுக செயலருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினாா்.

மரவனூா், செவல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையங்கள், வையம்பட்டி, மருங்காபுரி ஒன்றியங்களின் தூய்மைப் பணியாளா்கள், மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக்குத் தேவையான நோய்த் தொற்றுத் தடுப்பு உபகரணங்களை அன்பில் மகேஷ்
பொய்யாமொழி வழங்கி அனைவரும் பாதுகாப்புடன் பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தினாா்.

முன்னதாக பொத்தமேட்டுபட்டி பகுதியில் பொதுமக்களுக்கு அரிசி, காய்கறிகள் போன்ற நிவாரணப் பொருள்களை  வழங்கினாா். இதில் மாவட்ட திமுக பொருளாளா் கோவிந்தராஜன், நகரச் செயலா் கீதா. மைக்கில்ராஜ்  ஒன்றியச் செயலா்கள் ராமசாமி, சபியுல்லா, சின்ன அடைக்கன் செல்வராஜ், ஒன்றியக் குழுத் தலைவா்கள் அமிா்தவள்ளி, குணசேகரன், பழனியாண்டி, மருங்காபுரி ஒன்றியக் குழு உறுப்பினா் சிவக்குமாா், தகவல் தொழில்நுட்பப் பிரிவு தொகுதி ஒருங்கிணைப்பாளா் முரளிகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தலைப்புச்செய்திகள்