Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்தியாவில் ஒரே நாளில் 909 பேருக்கு கொரோனா தொற்று: 34 பேர் பலி

ஏப்ரல் 12, 2020 07:56

புது டெல்லி: இந்தியாவில் 8,356 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 273 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 909 இந்தியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், 34 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில், தற்போது வரை 8,356 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா- - 1,761
டில்லி -- 1,069
தமிழகம்-969
ராஜஸ்தான்- 709
ம.பி., - 532
தெலுங்கானா-504
குஜராத்-432 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 242 ல் இருந்து 273 ஆக அதிகரித்துள்ளது. 716 பேர் குணமடைந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்