![](admin/uploads/.5d540b605b8234.63725634.jpg)
Wednesday, 3rd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்சி: திருச்சியில் வசிக்கும் திருநங்கைகளுக்கு அறம் மக்கள் நலச்சங்கம் சார்பில் ஒரு மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.
கொரோனா தொற்றிலிருந்து மக்களை காக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதில் இருந்து அறம் மக்கள் நலச்சங்கம் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள ஆதரவற்றோருக்கு உணவு மற்றும் ஏழை,எளிய மக்களுக்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள் அடங்கிய அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திருச்சி அண்ணாநகர் பகுதியில் வசிக்கும் திருநங்கைகள் அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் தவித்து வருவதாக வந்த தகவலின் அடிப்படையில் அறம் மக்கள் நல சங்கம் சார்பில், அப்பகுதியில் வசிக்கும் திருநங்கைகள் அனைவருக்கும், நிதி உதவியுடன், ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, மளிகை பொருட்கள் அடங்கிய அத்தியாவசிய பொருட்களை தலைவர் சு .ராஜா, பொதுச்செயலாளர் SRK.ரமேஷ்குமார், மற்றும் முக்கிய நிர்வாகிகள் இணைந்து வழங்கினர்.