Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோவையில் 9ம் வகுப்பு மாணவி பலாத்காரம்: 8 சிறுவர்கள் கைது

ஏப்ரல் 13, 2020 12:09

கோவை: கோவையில் 9 ம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த சக மாணவர்கள் 4 பேர் உட்பட 8 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை, சிங்காநல்லூர் பகுதியில் செயல்படும் தனியார் பள்ளியில் படிக்கும் 9 ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, பெற்றோர், மாணவியை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு நடந்த பரிசோதனையில், மாணவி கர்ப்பமாக உள்ளது தெரியவந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், மாணவியிடம் விசாரணை நடத்தினர்.

அதில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர், உடன் படிக்கும் மாணவர்கள் 4 பேர் மற்றும் அவர்களது நண்பர்கள் 4 பேர் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இது குறித்து பெற்றோர், போலீசில் அளித்த புகாரின் பேரில், 8 மாணவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தலைப்புச்செய்திகள்