![](admin/uploads/.6215c104e10285.62972138.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: கொரோனா பரவலை தடுக்கும் விதமாக 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், தற்போது பாதிப்பு அதிகரித்துக்கொண்டே வருவதால் மேலும் 19 நாட்கள் நீட்டித்து மே 3ம் தேதி வரை ஊரடங்கு தொடரும் என பிரதமர் மோடி இன்று (ஏப்.,14) அறிவித்திருந்தார். கொரோனா பரவுதலை கட்டுக்குள் கொண்டுவர மக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இந்நிலையில், பிரதமரின் இந்த பேச்சு முடிவடைந்த சில நிமிடங்களிலேயே காங்., எம்பி., ப.சிதம்பரம், அதையும் விமர்சித்துள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் சிதம்பரம் பதிவிட்டுள்ளதாவது: பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துகளை மறுபரிசீலனை செய்கிறோம். ஊரடங்கை நீட்டிப்பதற்கான நிர்பந்தத்தை நாங்கள் புரிந்துக்கொள்கிறோம், ஆதரிக்கிறோம். ஆனால், அதைத்தாண்டி, பிரதமரின் புத்தாண்டு செய்தியில் ‛புதியது' என்ன? ஏழைகளின் வாழ்வாதாரம், அவர்களின் உயிர்வாழ்வு ஆகியனை அரசாங்கத்தின் முன்னுரிமைகளில் இல்லை என்பது வெளிப்படையானது. முதல்வர்களின் நிதி கோரிக்கைக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை.
ரகுராம் ராஜன் முதல் ஜீன் ட்ரீஸ் வரை, பிரபாத் பட்நாயக் முதல் அபிஜித் பானர்ஜி வரை அவர்களின் அறிவுரை, காது கேளாத ஆண்டுகளில் விழுந்துள்ளது. நடைமுறையில் உணவைக் கோருவது உட்பட, ஏழைகள் 21+19 நாட்களுக்கு தங்களைத் தற்காத்துக் கொள்ள விடப்பட்டுள்ளனர். பணம் இருக்கிறது, உணவு இருக்கிறது, ஆனால் அரசாங்கம் எதையும் வெளியிடாது. என் அன்பான நாடே, அழுங்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.