![](admin/uploads/.5c87568984b7c9.12700479.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: தமிழகம், கேரளா, புதுச்சேரி, இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வௌவால்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தகவல் தெரிவித்துள்ளது.
மனிதர்களிடையே வேகமாக பரவி வரும் உயிர்கொல்லி ‛கொரோனா வைரஸ்' வெளவால்களுக்கும் பரவியுள்ளது. வௌவால்கள் மூலம் கொரோனா பரவ வாய்ப்புள்ளதா என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு நடத்தியது. இதற்காக சில மாநிலங்களை சேர்ந்த இரண்டு வகையான வெளவால்களின் தொண்டை மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. அதில், தமிழகம், கேரளா, புதுச்சேரி, இமாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களின் வெளவால்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகா, சண்டிகர், குஜராத், ஒடிசா, பஞ்சாப், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்படவில்லை. வெளவால்கள் பாலூட்டிகள் என்பதால் அவை மனிதர்களுக்கு நேரடியாகவோ அல்லது வேறு சில விலங்குளின் மூலமாகவோ கொரோனா பரவியிருக்கலாம் என நம்பப்படுகிறது.