Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காவல் நிலையத்தை வீடியோ எடுத்து டிக்டாக் செயலியில் பதிவேற்றம் செய்த 2 பேர் கைது

ஏப்ரல் 15, 2020 07:48

திருச்சி: புத்தாநத்தம் காவல் நிலையத்தையும், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களையும் படமெடுத்து டிக்டாக் செயலியில் பதிவேற்றம் செய்த இருவா் கைது செய்யப்பட்டனா்.

ஊரடங்கு காரணமாக சாலைகளில் தேவையில்லாமல் சுற்றித் திரிவோரின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி புத்தாநத்தம் பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த வாகனங்களையும், காவல் நிலையத்தையும் படமெடுத்து அதை டிக் டாக் செயலியில் பதிவேற்றம் செய்த மணியங்குறிச்சி சக்திவேல் (30), பெங்களூரு சரவணன் (37) ஆகிய 2 பேரையும் காவல் உதவி ஆய்வாளா் கைது செய்தாா்.

தலைப்புச்செய்திகள்