Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்திற்கு 40,032 கொரோனா பரிசோதனை கிட்களை வழங்கிய டாடா நிறுவனம்

ஏப்ரல் 15, 2020 09:26

சென்னை: தமிழகத்திற்கு ரூ.8 கோடி மதிப்பிலான கொரோனா பரிசோதனைக்கான 40,032 பிசிஆர் கிட்களை டாடா நிறுவனம் வழங்கியுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 1,204 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வீட்டு கண்காணிப்பில் 28,711 பேரும், அரசு கண்காணிப்பில் 135 பேரும் உள்ளனர். கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் டாடா நிறுவனம், தமிழகத்திற்கு கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிய உதவும் 40,032 பிசிஆர் கருவிகளை தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது. ரூ.8 கோடி மதிப்பிலான இந்த பரிசோதனை கருவிகள் வழங்கியதற்காக முதல்வர் இபிஎஸ், நன்றி தெரிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்