Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கொரோனா பாதித்தோருக்கு 1,650 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது: திருப்பூர் ஆட்சியர்

ஏப்ரல் 15, 2020 03:36

திருப்பூர்: திருப்பூரில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்காக மருத்துவமனையில் 1,650 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. ஆயிரம் பேர் வரை தினந்தோறும் பரிசோதனை நடத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது,” என மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

கொரோனா  வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை திருப்பூரில் 78 ஆக உள்ள நிலையில் நேற்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் செய்தியாளர்களை சந்தித்த போது தெரிவித்ததாவது:

இதுவரை 78 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அனைவரும் கோவை ஈ.எஸ்.ஐ. மருத்துவமனையில் நல்ல முறையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் அவர்கள் தங்கியிருந்த பகுதிகள் என அந்தந்த இடங்களில் அனைவருக்கும் சோதனை செய்யப்பட்டு வருகிறது. ஆயிரம் பேர் வரை தினந்தோறும் சோதனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணியாற்றி வருகிறோம்.  திருப்பூரில் 1,650 படுக்கைகளுடன் தயார் நிலையில் உள்ளது. கொரோனா  தடுப்பு பணியாற்றி வருகின்ற மருத்துவர்கள் , செவிலியர்கள் மற்றும் காவலர்களுக்கு அவ்வப்போது பரிசோதனைகள் மேற்கொண்டு வருகிறோம்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

தலைப்புச்செய்திகள்