Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பிரதமர் மோடியின் மன் கீ பாத் உரை: வரும் 26ல் ஒலிபரப்பு

ஏப்ரல் 16, 2020 07:10

புதுடெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றும், 'மன் கீ பாத்' எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சி, வரும், 26ல் ஒலிபரப்பாகும் என, அனைத்திந்திய வானொலி தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதமும், கடைசி ஞாயிறு அன்று, வானொலி மூலம், நாட்டு மக்களுக்கு உரையாற்றும், மனதின் குரல் நிகழ்ச்சி ஒலிபரப்பாகி வருகிறது. பொதுமக்கள், 1800-11-7800 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளலாம்.

கடந்த மாதம் ஒலிபரப்பான நிகழ்ச்சியின் போது, 21 நாட்கள் முழு அடைப்பை அறிவித்து, மக்களை மிகுந்த சிரமத்திற்கு ஆளாக்கியதற்கு, பிரதமர் மோடி மன்னிப்பு கோரினார். கொரோனா வைரசுக்கு எதிரான, இந்த வாழ்வா - சாவா போரில் வெல்வதற்காகவே, இந்த முழு அடைப்பு அறிவிக்கப்பட்டதாக கூறினார்.

இந்நிலையில், ஏப்ரல் மாதத்திற்கான, மனதின் குரல் நிகழ்ச்சி, வரும், 26ல், ஒலிபரப்பாக உள்ளதாக, அனைத்திந்திய வானொலி, நேற்று தகவல் வெளியிட்டது.
 

தலைப்புச்செய்திகள்