![](admin/uploads/.5eb3de5b900a30.37492712.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைப்பெற்ற 218 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
கொரோனா வைரஸ் முதலில் பரவத் துவங்கிய மாநிலமான கேரளாவில், மொத்தமாக, 387 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில், 218 பேர் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மூன்று பேர் மட்டுமே இதனால் உயிரிழந்துள்ளனர். இதைத்தவிர, வைரஸ் அறிகுறியுடன் உள்ள, 167 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே, அதிக நோயாளிகள் குணமடைந்துள்ள மாநிலமாக, கேரளா விளங்குகிறது