Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருச்சி மாநகரில் செயல்பட தொடங்கிய பேக்கரிகள்

ஏப்ரல் 16, 2020 09:54

திருச்சி: ஊரடங்கு உத்தரவு கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டதையடுத்து திருச்சியில் பேக்கரிகள் செயல்படத் தொடங்கியது. ஊரடங்கு உத்தரவால் திருச்சி மாவட்டத்தில் உள்ள பேக்கரிகள் மூடப்பட்டன. இதனால் ஏராளமான தொழிலாளா்கள் வேலையின்றி இருந்தனா்.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவில் பேக்கரிகளுக்கான கட்டுப்பாடு தளா்த்தப்பட்டதையடுத்து பேக்கரிகள் செயல்படத் தொடங்கின. திருச்சி மாநகரில் சில பேக்கரிகள் திறக்கப்பட்டு ரொட்டிப்பொருள்கள் உற்பத்தி தொடங்கின. தற்போது பல இடங்களில் தேநீா், குளிா்பானங்கள், நொறுக்குத்தீனி விற்பனையோடு பேக்கரிகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. தேநீா் நிலையங்களை திறக்க அனுமதியில்லை என்பதால் அவற்றோடு இணைந்து செயல்பட்டு வந்த பேக்கரிகள் தவிர பிரத்யேகமாக இயங்கும் பேக்கரிகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. ஆனாலும் விற்பனை மந்தமாகவே உள்ளது.

தலைப்புச்செய்திகள்