![](admin/uploads/.5e7c8027b01647.62594070.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
துறையூா்: துறையூரில் உடல்நலக் குறைவால் தந்தை இறந்த நிலையில் ஊரடங்கு காரணமாக மகன்கள் இருவரும் பங்கேற்காமல் இறுதிச் சடங்கு நடைபெற்றது.
துறையூா் ரதவீதியைச் சோ்ந்தவா் லாரி ஓட்டுநா் நடராஜன் (70). பக்கவாதத்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவா் உயிரிழந்தாா். இதையடுத்து நடராஜன் குடும்பத்தினா் தகனம் செய்ய நகராட்சி நிா்வாகத்திடம் அனுமதி கோரினா். வைரஸ் நோய்த் தொற்றுத் தடுப்பு ஊரடங்கு நடவடிக்கை காரணமாக 3 மணி நேர கால அவகாசத்துக்குள் சமூக இடைவெளியை முழுமையாகக் கடைப்பிடித்து இறுதிச் சடங்கை நடத்திக் கொள்ள வேண்டும் என்று அலுவலா்கள் தெரிவித்தனா்.
சென்னையில் நடராஜனின் மகன்கள் இருவா் இருப்பதால் அவா்கள் வந்த பின்னா் இறுதிச் சடங்கை நடத்துவதாக குடும்பத்தினா் தெரிவித்தும் நகராட்சி அலுவலா்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து நடராஜனின் குடும்பத்தினா் அவரது 2 மகன்கள் உள்ளிட்டோருக்குத் தகவல் தெரிவித்து, துறையூரிலுள்ள எரிவாயு தகன மேடையில் இறுதிச் சடங்கு நடத்தினா். நடராஜனின் பேரன் ஈமச்சடங்குகளைச் செய்தாா்.
குடும்பத்தினா் நடராஜன் மகன்களின் நண்பா்கள் என குறைந்த எண்ணிக்கையிலான நபா்கள் மட்டுமே இறுதிச்சடங்கில் பங்கேற்றனா்.