![](admin/uploads/.5e15b469b42637.99529100.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்சி: திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டவர்களில் 32 பேர் பூரண குணமடைந்த நிலையில் நேற்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 29 பேரும், கரூர் 1, அரியலுார் 1, பெரம்பலுார் 1 என மொத்தம் 32 நபர்கள் சிகிச்சை பெற்று வந்தனர்.
இவர்கள் அனைவரும் பூரண குணமடைந்த நிலையில் நேற்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு சொந்த ஊர் மற்றும் வீடுகளுக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் மருத்துவக் குழுவினர் அவர்களுக்கு பழங்கள் வழங்கியும், கைதட்டி வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். இதுகுறித்து மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை டீன் வனிதா கூறுகையில், “தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அனைவரும் சிகிச்சையின் போது மருத்துவக் குழுவினருக்கு முழு ஒத்துழைப்பு அளித்தனர். ஆகையால் இவர்கள் விரைவில் குணமடைய காரணமாகும். அதேபோல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் ஒத்துழைப்பு அளித்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவரும் குணமடைந்து வீட்டிற்கு செல்லலாம்,” என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் சிவசுப்ரமணியன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் சுப்ரமணி, மருந்து கண்காணிப்பாளர் டாக்டர் ஏகநாதன் மற்றும் சிகிச்சையளித்த டாக்டர்கள், மருத்துவப்பணியாளர்கள் உடனிருந்தனர்.