Sunday, 7th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
மணப்பாறை: மணப்பாறையில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட செயலாளர் மருத்துவர் ஹரிஹரன் அம்மா உணவகம், தூய்மை காவலர்கள், காவல்துறையினருக்கு கபசுர குடிநீர் வழங்கினார். அத்துடன் பொதுமக்கள் கைகளை சுத்தப்படுத்த குழாய்கள் அமைக்கப்பட்டது.
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் மக்கள் நீதி மய்யம் சார்பில், மஞ்சம்பட்டி தனியார் பள்ளி மைதானத்தில் நடைபெற்று வரும் தற்காலிக காய்கறி சந்தையில் மாவட்டச் செயலாளர் மருத்துவர் ஹரிஹரன் தலைமையில் பொதுமக்கள் கைகளை சுத்தம் செய்துகொள்ளும் வகையில் குழாய்கள் அமைக்கப்பட்டு சோப்பு, தண்ணீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ரோட்டரி சங்கம் இணைந்து மேற்கொண்ட இந்த பணியினை மணப்பாறை வருவாய் வட்டாட்சியர் தமிழ்கனி துவக்கி வைத்து கைகளை சோப்பு போட்டு குழாயில் சுத்தம் செய்துகொண்டார். அதனைத்தொடர்ந்து அம்மா உணவக ஊழியர்கள், நகராட்சி தூய்மை காவலர்கள், காவல்துறையினருக்கு கபசுர குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
மக்கள் நீதி மய்யம், ரோட்டரி சங்கம் ஆகியோர் செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் மணப்பாறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையும் இணைந்து பொதுமக்களுக்கு நிலவேம்பு பொடியினை அளித்தனர்.