![](admin/uploads/.605d74c6e788c1.46827111.jpg)
Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருப்பூர்: தமிழகம் முழுவதும் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக போலீசார் பல்வேறு விழிப்புணர்வு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருப்பூர் வடக்கு போலீஸார் சார்பில் திருப்பூர் புது பஸ் ஸ்டாண்ட் பகுதியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில், ஹெல்மெட்டில் கொரோனா போல வேடம் அணிந்த ஒருவர் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பொதுமக்கள் மத்தியில் பேசினார். மேலும் போலீசார் கொரானா விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து அவர்கள் திருப்பூர் புது பஸ் ஸ்டாண்ட் மற்றும் பெருமாநல்லூர் ரோடு பகுதிகளில் வாகனங்களில் சென்ற பொதுமக்களை நிறுத்தி கொரோனா நோய் குறித்து அறிவுரை வழங்கினர்.