![](admin/uploads/.60e7f91e2efe28.65181191.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 2,18,433 பேர் கைதாகி ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த உத்தரவை மீறி தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அவர்கள் சென்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.
தமிழகம் முழுவதும், 2 லட்சத்து 18 ஆயிரத்து 533 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2 லட்சத்து 5 ஆயிரத்து 54 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1 லட்சத்து 85 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.98,07,000 அபராதம் வசூலிக்கப்பட்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.