Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களில் தரமில்லை: மத்திய அரசு

ஏப்ரல் 17, 2020 04:32

சீனாவிலிருந்து சமீபத்தில் வந்த 63 ஆயிரம் பாதுகாப்பு உபகரணங்களில் (பிபிஇ கிட்கள்) தரமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனாவை எதிர்த்துப் போராடும் டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உடைகள் உள்ளிட்ட தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை உள்நாட்டில் தயாரிப்பதோடு, வெளிநாடுகளிலிருந்தும் இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. இந்நிலையில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை தர சோதனைக்கு உட்படுத்திய போது, அது தரமற்றதாக இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை தரப்பில் வெளியான தகவலில், சமீபத்தில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 62 ஆயிரம் பிபிஇ கிட்கள், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்