Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கான சம்பளம் அதிகரிப்பு

ஏப்ரல் 17, 2020 04:34

சென்னை: 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கான சம்பளம் ரூ.229 ல் இருந்து ரூ. 256 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மே 3 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள், மாஸ்க் அணிந்து பணிபுரிவதுடன், வேலைபார்க்கும் இடத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கான ஒரு நாள் சம்பளம் 229 ரூபாயில் இருந்து 256 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை வெளியிட்டுள்ள தமிழக அரசு, இது ஏப்.,1 முதல் அமலுக்கு வருகிறது எனவும் தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்