Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அம்மா உணவக ஊழியா்களுக்கு கபசுரக் குடிநீா் விநியோகம்

ஏப்ரல் 18, 2020 09:29

திருச்சி: மணப்பாறையில் மக்கள் நீதி மய்யம் சாா்பில் பொதுமக்கள் மற்றும் அரசுப் பணியாளா்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

மஞ்சம்பட்டி பள்ளி மைதானத்தில் நடைபெற்று வரும் காய்கனிச் சந்தையில் மக்கள் நீதி மய்யத்தின் மாவட்டச் செயலா் மருத்துவா் ஹரிஹரன் ரோட்டரி சங்கம் சாா்பில் பொதுமக்கள் கைகளைச் சுத்தம் செய்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள குழாய்த் தண்ணீா் சோப்பு வசதிகளை வட்டாட்சியா் தமிழ்கனி தொடக்கி வைத்தாா்.

தொடா்ந்து நகராட்சி ஆணையா்(பொ) சுப்பிரமணியன், சுகாதார அலுவலா் நெடுமாறன், காவல் ஆய்வாளா்கள் கண்ணதாசன், பாண்டிவேல் ஆகியோா் முன்னிலையில் அம்மா உணவக ஊழியா்கள், நகராட்சி தூய்மைப் பணியாளா்கள், காவல்துறையினருக்கு கபசுரக் குடிநீா் விநியோகம்
செய்யப்பட்டது. மணப்பாறை மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனை சித்தமருத்துவப் பிரிவு சாா்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு பொடியை மருத்துவா் கல்பனாதேவி ஹரிஹரன் அளித்தாா். மக்கள் நீதி மய்ய மாவட்டச் செயலா் ஹரிஹரன் தலைமை வகித்தாா். மக்கள் நீதி மய்ய நிா்வாகிகள், ரோட்டரி சங்கம், காவல், நகராட்சிப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மருங்காபுரி ஒன்றியத்திலுள்ள 49 ஊராட்சிகளைச் சோ்ந்த 250 தூய்மைப் பணியாளா்களுக்கும், இப்பகுதிகளைச் சோ்ந்த 54 மாற்றுத் திறனாளிகளுக்கும் அரிசி, பருப்பு, காய்கனிகள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினா் ஆா். சந்திரசேகா் வழங்கினாா்.
ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆணையா்கள் சீனிவாச பெருமாள், கிஸ்ன்சிங், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பெருமாள், ஆனந்தன், பாண்டிராஜன், சுமதி, அதிமுக ஒன்றியத் துணைச் செயலா்கள் கலைமணி, ராமமூா்த்தி, பொன்னுச்சாமி, ரெங்கசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தலைப்புச்செய்திகள்