Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்சி: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் பொய்யாமொழி தனக்கு முகநூல், வாட்ஸ் அப் மற்றும் எஸ்.எம்.எஸ். வாயிலாக நிவாரண பொருட்கள் கேட்ட பொதுமக்களுக்கு உதவிகளை வழங்கினார்.
திருச்சி தெற்கு மாவட்ட அலுவலகத்தில், திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும் திருவெறும்பூர் சட்ட மன்ற உறுப்பினருமான, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருவெறும்பூர், திருச்சி கிழக்கு, மணப்பாறை தொகுதிகளுக்கு உட்பட்ட ஒன்றியம், நகரம், பேரூர் ஆகிய பகுதிகளில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மூன்றாவது கட்டமாக கையுறைகள் முகக்கவசம் மற்றும் கிருமிநாசினிகளை கழக நிர்வாகிகள் மூலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும், எம்.எல்.ஏ., அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் வாட்ஸ்அப், எஸ்.எம்.எஸ். மூலமாகவும் தொலைபேசி வாயிலாகவும் உதவி கேட்பவர்களுக்கு மாவட்ட அலுவலகத்திற்கு அழைத்து அங்கு அவர்களுக்கு தேவையான அரிசி மற்றும் மளிகை சாமான்களை வழங்கினார்.
இந்நிகழ்வில் திருச்சி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் கே.என்.சேகரன், கோவிந்தராஜ், கே.எஸ்.எம்.கருணாநிதி, செல்வராஜ், ராமசாமி, சின்னஅடைக்கன், மலைக்கோட்டை மதிவாணன், ராஜசேகர், கொட்டப்பட்டு தர்மராஜ், நீலமேகம், செல்வராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.