Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருப்பூர் எஸ்.வி. காலனியில் கொரோனா தொற்று தடுப்பு உறுதிமொழி ஏற்பு

ஏப்ரல் 18, 2020 11:50

திருப்பூர்: திருப்பூரில் எஸ்.வி. காலனி பகுதியில் பள்ளி மாணவிகள் கொரோனா வைரஸ் ஓவியத்தை வரைந்து பொதுமக்கள் முனன்னிலையில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பல மனித உயிர்களை பலி வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட வேளையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திருப்பூர் மாவட்டம் எஸ்.வி.காலனி மூன்றாவது விதியில்  பள்ளி மாணவிகள் கொரோனா வைரஸ் படத்தை வரைந்து விழித்திரு, வீட்டில்இரு, விலகிஇரு போன்ற வாசகங்களுடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வரைந்திருந்த இந்த ஓவியத்தை பொதுமக்கள் பலரையும் அழைத்து காண்பித்து சமூக இடைவெளியை கடைபிடித்து கொரோனா ஒழிப்பு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்