Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காளிபாளையத்தில் கோகுலம் கார்டன் குரூப் சார்பில் உணவு வழங்கல்

ஏப்ரல் 18, 2020 11:54

அவினாசி: திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகேயுள்ள காளிபாளையம் ஊராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பசியோடு வாடிக்கொண்டிருக்கும் ஊர் பொதுமக்களுக்கு கோகுலம் கார்டன் குரூப் சார்பில் ஊர் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

கோகுலம் குரூப் தலைவர் தங்கராஜ் ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கினார். மேலும்  காளிபாளையம் ஊராட்சி முழுவதும் தொடர்ந்து ஏழு தினங்களுக்கு ஆயிரம் பேருக்கு உணவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஊராட்சி தவைவர் வடிவேல், மேலாளர் பழனிசாமி, சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்