![](admin/uploads/.5dcf75b197ee54.89487271.jpg)
Thursday, 4th July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆந்திராவில் பல பகுதிகளிலும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. கொரோனாவுக்கான பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 572 ஆக உயர்ந்தது. இந்நிலையில் காளஹஸ்தியில் நேற்று முன்தினம் மட்டும் 2 பெண்கள் உட்பட 5 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. டில்லி மாநாட்டில் பங்கேற்றவர்களுடன் தொடர்பில் இருந்தால் நோய் பரவியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
மேலும் இவர்கள் பாதிப்பு காரணமாக கல்கி ஆசிரமத்தில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சித்தூர் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.