Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 2.39 லட்சம் பேர் கைது

ஏப்ரல் 19, 2020 01:10

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றியதாக 2.39 லட்சம் பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் வெளியிட்ட அறிக்கை: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு மற்றும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கின் போது பின்பற்றப்பட வேண்டிய விதிகளை மீறியதாக இதுவரை 2,39,239 பேர் கைதாகி ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 2,03,256 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், ஒரு கோடியே 17 லட்சத்து, 76 ஆயிரத்து 394 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறியதாக 2,24,952 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.


 

தலைப்புச்செய்திகள்