Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் மேலும் 105 பேருக்கு கொரோனா: பாதிப்பு எண்ணிக்கை 1477 ஆக உயர்வு

ஏப்ரல் 19, 2020 03:44

சென்னை: தமிழகத்தில் இன்று (ஏப்.,19) மேலும் 105 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1477 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 15 ஆக உள்ளது.

தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியான அறிக்கை: தமிழகத்தில் இதுவரை 35,741 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 105 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1477 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் ஒரே நாளில் ஒரு 10ம் வகுப்பு மாணவன், 4 முதுநிலை மருத்துவ மாணவர்கள் உட்பட 50 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கோயம்புத்தூரில் பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்று 46 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அதிகபட்சமாக கோவையில் இன்று 24 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்தம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 411. கடந்த 3 நாட்களாக உயிரிழப்பு எதுவும் இல்லாமல் 15 என்ற நிலையிலேயே உள்ளது. வீட்டு கண்காணிப்பில் 21,381 பேரும், அரசு கண்காணிப்பில் 20 பேரும் உள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்