Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணி: பிரதமர் - முதல்வர் ஆலோசனை

ஏப்ரல் 19, 2020 03:55

சென்னை: தமிழகத்தில் மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்புபணிகள் தொடர்பாக பிரதமர் மோடி, முதல்வர் இ.பி.எஸ் இடம் கேட்டறிந்தார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்புபணிகள் குறித்து தொலைபேசி மூலம் முதல்வர் இ.பி.எஸ்சிடம் கேட்டறிந்தார். அப்போது தமிழகத்திற்கு அதிகமான அளவில் ரேபிட் கிட் வழங்கும் படி கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு பதில்அளித்துள்ள பிரதமர் மோடி ரேபிட் டெஸ்ட் கிட்டை வழங்குவதாக தெரிவித்தார். இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்