Tuesday, 2nd July 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
விருதுநகர்: ராஜபாளையம் அருகே கொரொனா வைரஸ் தாக்கத்தால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மதுக்கடைகள் மூடப்படுள்ள நிலையில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தேவதானம் பகுதியைச் சேர்ந்தவர் ராமையா மகன் அம்மையப்பன் வயது 55. இவர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்ய அனுமதி இருந்த காலத்தில் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தவர். தற்போது 144 தடை உத்தரவு உள்ள நிலையில் மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதல், மது பிரியரான இவர் மது குடிக்காமல் இருக்க முடியாததால் தோப்பு ஒன்றில் சாராய ஊறல் போட்டு அதில் சாராயம் காய்ச்சி குடித்ததுடன் விற்பனையிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.
இதுதொடர்பாக சேத்தூர் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், சேத்தூர் காவல்நிலைய ஆய்வாளர் குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அம்மையப்பனை கைது செய்துள்ளனர்.
மேலும், ஊறலை அழித்து அவரிடமிருந்து கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்துள்ள போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.